Friday, June 22, 2012

எனக்கு மிகவும் பிடித்த மனுஷ்யபுத்திரன் கவிதை



உனக்குத் தெரியவேயில்லை

இன்று காலை உன்னை
அவ்வளவு
அருகாமையில் கடந்து சென்றேன்

... சிறிதும் ஓசையில்லாமல்
  எதையும் தட்டிவிடாமல்
  உன் உள்ளுணர்வு விளித்துக்கொள்வதற்குள்
  உன் தற்செயல்களை அனுமதிக்காமல்

முன்பொருமுறை
ஒரு சாலை விபத்திற்கான கணநேர விலகலில்
மரணம் என்னைக் கடந்து சென்றது போல.