Wednesday, January 6, 2010

ஞாநியும் திரிபுகளும்

சமீப காலங்களில் இணையம் உயிர்மை சம்பந்தப்பட்ட மூன்று நபர்களையும் அவர்களோடு இணைத்து பத்திரிக்கையாளர் ஞாநியையும் சேர்த்து வரும் செய்திகளில் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இதைப்பற்றிய சில எண்ணங்களை நாமும் வெளியிடலாம் என்று எண்ணியதன் விளைவே இந்த பதிவு.


ஞாநி பற்றிய பொதுவான கருத்துக்களாக இணையத்தில் கிடைப்பவை என்று பார்க்கும்போது என்னை பொறுத்தவரை, ஒன்றிரண்டைத்தவிர அனைத்துமே முழுதாக அவர் கூறும் கருத்துக்களை சிந்திக்காமல் எழுதப்படும் பதிவுகளே. ஞாநி பொதுவாக பொதுவெளியில் தன்னுடைய கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட தயங்குபவர் இல்லை. அவரது வார்த்தை பிரயோகம் முழுவதுமே அவரது மனதில் தனிக்கைசெய்யப்பட்ட பின்பே அவரால் வெளியிடப்படும்.

பெரும்பாலான வாசகர்கள் அவர் முற்றிலும் எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருப்பவர் என்றே தங்கள் பதிவுகளிலும், என் நண்பர்கள் பலர் என்னிடம் நேர்பேச்சிலும் கூறியிருக்கிறார்கள். நான்கு வருடமாக அவரை கூர்ந்து கவனித்துவரும் என்னால் (நான் அவரது கடந்த நான்கு வருட கட்டுரைகள் அனைத்தையுமே படித்ததன் காரணமாக), வாசகர்களின் அவர்மீதான இக்கருத்து முற்றிலும் தவறானது என்று அடித்துக்கூற முடியும்.


தமிழ் நாட்டை பொறுத்தவரை, அனைவருமே தங்கள் சிந்தனைக்கு ஏற்ப தங்கள் மனதில் குறைந்தபட்சம் ஒருவரையாவது தங்களது ஹீரோவாக, புனிதபசுக்களாக கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ரஜினி, கமல், இளையராஜா, கருணாநிதி, என்ற ஒரு நீண்ட வரிசை உண்டு. இலக்கிய நண்பர்களுக்கு பெரும்பாலும் புதுமைப்பித்தன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு என பலர் இருக்கலாம். இவர்களைப்பற்றி யாரேனும் ஒரு விஷயம் தவறாக சொல்லிவிட்டால், சொல்லப்பட்ட கருத்தை யாரும் பார்ப்பதில்லை. தன தலைவனை ஒருவன் குறை சொல்லிவிட்டான், அவன் நேர்மாறானவன் என்றே எண்ணுகின்றனர்


ஞாநிக்கு எவையுமே புனிதம் அல்ல, அனைத்துமே வெளிப்படையாகவும், விவாதத்திற்குள்ளகவுமே இருக்க வேண்டும். எவையுமே விமரிசனத்துக்கு
ப்பார்ற்பட்டவை என்று அவர் நினைப்பது இல்லை. எனவே அவரது கருத்துக்களுக்கும், விமரிசனங்களுக்கும் ஒரு பிரபலம் ஆளாகும்போதும், பிரபலத்தை சார்ந்த குழுக்கள் அவரது கருத்தை பார்க்காமல், அவர் எதிர்மரையானவர் என்று ஒரு சின்னத்தனமான வட்டத்துக்குள் அடைக்கத்தொடங்குகின்றனர்.

அவரது கருத்துக்களை சிந்தனை செய்து சரியா தவறா என்று விவாதிக்காத குழுக்களை பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால், அவரது கருத்துக்களை திரிப்பவர்களை நினைக்கும் போதுதான் மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. இதில் என்னால் சகிக்க முடியாத விஷயம் என்னவென்றால், அவரது கருத்துக்களை திரிப்பவர்கள் சாதாரண வாசகர்கள் இல்லை, வாயிலே நுழையாத பல எழுத்தாளர்களின் நுட்பமான இலக்கிய சிந்தனைகளையே வாசித்து உணர்ந்துகொள்ளும் அறிவுபெற்ற பெரும் படிப்பாளிகள் என்பதுதான்.


இங்கு எனக்கு ஒரு சந்தேகம் தோன்றுகிறது. ஞாநி சிக்கலான கருத்துக்கள் எதையுமே சொல்வதில்லை, சொன்னாலும் மிகவும் சுருக்கமாக, மிக மிக எளிய மொழியில், சின்ன சின்ன சொற்களில் எழுதுபவர். இதையே புரியாமல் திரிப்பவர்கள் பேரிலக்கியங்களை புரிந்து கொள்கிறார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது.


ஞாநியின் குறைகளாக நான் நினைப்பது, சிலமுறை அவர் சில கருத்துக்களை அவசர முன்முடிவுடன் வெளியிடுகிறார், அனால் அவற்றிற்கான காரணங்களை விரிவான விளக்கங்களுடன் எழுதுவதில்லை. இந்துத்துவத்தின் மீதான அவரது கோபம் ஒருபக்க பார்வையிலே அவரால் எழுதப்படுகிறது, மறுபக்கம் அவரால் தீர்க்கமாக நிராகரிக்கப்படுகிறது.


அவரது பலூன் நாடகத்தை அலையன்ஸ் பிரான்சே அரங்கில் சில நாட்களுக்கு முன்பாக நடத்தினார். சிறப்பான கரு கொண்ட அந்த நாடகத்தில், மோசமான குணம் கொண்ட பாத்திரங்கள் அனைவருமே இந்து மத அடையாளங்களுடன் இருந்தார்கள், ஆனால் நல்லவர்கள் அனைவருமே வேற்று மதத்தினராகவோ அல்லது மத மறுப்பை கொண்டவர்களாகவோ இருந்தனர். ஒருவர் நான் பறையன், நான் பறையன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். இது சாதி, மத மறுப்பை கொண்டிருப்பவர்களுக்கு கொஞ்சம் அசொவ்கரியமாகவே இருந்தது. மற்றபடி, நாடகத்தில் எனக்கு உவப்பற்ற விஷயங்கள் இருந்தாலும், தேர்ந்த நடிப்புடன், சிறப்பான கதை களத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.


ஞாநி எந்த விஷயத்தையும் அதன் புத்திசாலிதனத்துக்காக பாராட்டுவதில்லை; மாறாக அதில் நேர்மை இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கிறார். புத்திசாலித்தனமான அயோக்கியத்தை அவர் வெறுப்பதற்கு அளவே இல்லை. எனக்கு தெரிந்து கருத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், நேர்மைக்காக ஏற்றுக்கொள்ளப்படுவதும்; நேர்மையாகவும் எளிமையாகவும் இருப்பதற்கு கூட விமரிசிக்கப்படுவதும் எழுத்தாளர்களில் இவர் ஒருவரே.


உயிரோசையில் வெளிவந்த manushyaputthiranin கட்டுரையில் அவர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில், எஸ். ராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு விழாவில் ஞாநியின் பேச்சுக்கு எதிராக, அவருக்கு கண்டனம் தெரிவிக்க சொல்லி நிறைய sms வந்ததாகவும், அவர் தன விருந்தினர் என்பதால் கண்டனம் தெரிவிக்கவில்லை, சபையை திசை திருப்ப விரும்பவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். குறுஞ்செய்திகள் அதிகம் வந்ததினாலும், சாரு அதை முற்றிலுமாக திரித்து இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாலும், தானே அந்த விழாவின் ஏற்பாளர் என்பதாலும், ஞாநியின் பேசுபற்றி ஒரு வரியேனும் சொல்லவேண்டிய கட்டாயம் manushya புத்திரனுக்கு இருக்கிறது, ஆனால் அதைப்பற்றி, அவர் வாயே திறக்கவில்லை. அனால் இன்று தனது பெருந்தன்மையாக இதை குறிப்பிடுகிறார். உண்மையில் அன்று ஞாநி பேசியதில் தவறே இல்லை, அவர் பேசியதின் மையப்புள்ளியை முற்றிலும் வேறான திசைக்கு கொண்டு சென்றவர் எஸ். ராமகிருஷ்ணன்தான். எஸ். ராமகிருஷ்ணன் பேச்சின் மைய புள்ளியையும், ஞாநியின் பேச்சின் மைய புள்ளியையும் இணைத்து பார்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

இதில் அதிகமும் மன அவஸ்தைக்கு உள்ளானவர் சாருதான்; என் போன்ற புதிதாக இலக்கியத்துக்குள் நுழையும் வாசகர்கள் சாருவையும் ஜெயமோகனையும் ஒரே நேரத்தில் படிக்க நேர்ந்தால் மேம்போக்கான, வெறும் பரபரப்பை மட்டும் விரும்பும் வாசகர்கள் மட்டுமே தங்குவார்கள் என்பதும், நாளடைவில் அவர்களும் ஒருவேளை அவர் அறிமுகப்படுத்தும் புத்தகங்களை படித்தால் மாறிவிடுவார்கள் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக சாரு நிறைய.

இதில் காமெடி என்னவென்றால் மநுஷ்யபுத்திரனின் கட்டுரையில், அவர் தான் ஊனத்தை குறையாக கருதவில்லை, அனால் அதை வைத்து இலக்கியத்தில் அரசியல் சிலர் பண்ணுவதுதான் வேதனை அளிக்கிறது என்று குறிப்பிடுகிறார். சாருவுக்கே இந்த அரசியலில் கேவலமான முதலிடத்தை தர முடியும். ஆனால் தன்னை பற்றிதான் ஒருவர் வேதனைப்படுகிறார் என்றே தெரியாமல் தன எதிரியை விமரிசிப்பதால் தன் வலை தளத்தில் போட்டிருக்கிறார்.
ஞாநி கருணாநிதியை விமரிசிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டிருக்கிறார் என்பது போன்ற தவறான் பிரசாரங்கள் இன்று தொடர்ந்து பரப்பபடுகிறது. ஒரு அரசியல் விமரிசகர் அரசியலை விமரிசிக்கும் போது அந்த சூழ்நிலையில் முதல்வராய் இருப்பவர் செய்யும் செயல்களையே பெரும்பாலும் விமரிசிக்கவேண்டிய கட்டாயமே இருக்கிறது. அது சமூகத்தில் ஏற்படும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி. அவர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது இவாறாக கருணாநிதியை விமரிசித்தால் குறை சொல்வதற்கு வழி இருக்கிறது.


ஞாநி ஜெயலலிதாவை விமரிசிப்பதில்லை; இதுவும் தவறான பிரசாரமே. ஜெயலலிதாவுக்கு அரசியல்வாதியாக கூட இருக்க தகுதியில்லை என்று எழுதியவர் அவர்.

No comments:

Post a Comment