Wednesday, March 3, 2010

சாருவை நோக்கி சில கேள்விகள்

எங்கள் ஊர்ப்புறத்தில் கல்லுணிமங்கன்களை நடுத்தெருவில் வைத்து கோபத்துடன் கேள்வி கேட்பார்கள்.  அந்த கேள்விகளுக்கு பெயர் "மானங்கெட்ட கேள்விகள்."  இதற்கு சில உப விளக்கங்களும் உண்டு.  அவற்றிற்கு பொதுவான அர்த்தம் அந்த கேள்விகளுக்கு மன்குநித்தனமான பதில் வரும் இல்லை என்றால், குனிந்துகொண்டே நிற்பான் மங்குனி.  இப்போது கவனிக்க வேண்டிய விஷயம்  சாரு பதில் சொல்லி இருக்கிறார்.

1.  2009 டிசம்பருக்கு பிறகு நித்யானநதரை பற்றி எழுதிய பன்னிரண்டு புத்தகங்களையும் முடிக்காமல் பாதியிலே நிறுத்திவிட்டேன் என்கிறீர்களே பின்ன என்ன மயிருக்கு அவரது போட்டோவை உங்கள் வலைப்பக்கத்தில் முகப்பு படமாக நேற்றுவரை வைத்திருந்தீர்கள்? (அதே கட்டுரையில் புத்தகங்களை கொடுத்துவிட்டேன் ஆனால் 4000/- இன்னும் பாக்கி என்று எழுதி இருப்பதை சாரு டச்சு என்று கொள்ளலாமா அய்யா?)

2. எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் சாரு (தன் தாயை பற்றி கூட) நித்யாவின் வீட்டில் அலைந்து கொண்டிருந்த செக்ஸ் அழகிகளை பற்றி ஏன் முன்னமே போட்டு உடைக்கவில்லை?.

3. கும்பகோணத்தில் ஒரு குடிசைப் பள்ளிக்கூடம் எரிந்து 90 குழந்தைகள் எரிந்து போனார்களே, அதுவும் மங்களமா?” என்று ஏன் நித்யாவிடம் கேட்கவில்லை?

4. சொஸ்தப்படுத்துபவர்கள் என்ற பிரிவில் உங்களுக்கு உடன்பாடு இல்லாத பட்சத்தில் அதை சிலாகிதித்து எழுத காரணம் ஒருவேளை அந்த நேரத்தில் நீங்கள் அடைந்த உன்மத்த நிலையே என்று நாங்கள் கொள்ளலாமா?

5. நீங்கள் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவர் என்பதற்கு நீங்கள் அசைவம் சாப்பிடுவதை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்; எனில், அசைவம் சாப்பிட்டால்தான் அவன் முஸ்லீம் என்று நாங்கள் பொருள் கொள்ளலாமா?

6. "ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள். அவர்களின் ஒரே செல்ல மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே நித்யானந்தரின் ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்து விட்டாள். அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது"  எனில் நீங்கள் முதலிலே இதை அம்பலப்படுத்தாமைக்கு காரணம் உங்களுடைய சிந்தித்து முடிவெடுக்கும் பொறுமை என்று கொள்ளலாமா?

7. ஒரு பெண் ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது அவளுடைய அந்தரங்கம்.  அதையும் மீறி அவளுடைய போட்டோவை உங்கள் வலைப்பக்கத்தில் பல கோணங்களில் போட்டு இருக்கிறீர்களே உங்கள் நியாயம் நியாயந்தானா? (இதில் உள்ள வக்கிரங்களையாவது சாரு நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது அவரது வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்)

 8.  நீங்கள் மந்திரித்துவிட்ட ஆடாக மட்டுமல்லாமல் மற்றவர்களையும் ஆக்கி கொண்டிருந்தீர்களே அப்போது சுவாமிஜி என்ன செய்துகொண்டிருந்திருப்பார் என தங்களின் கற்பனை திறனை கொண்டு எங்களுக்கு விளக்கமுடியுமா?

நீங்கள் எங்கள் ஊரின்  கல்லுணிமங்கன் போன்றவர் என்பதால் இக்கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்லாமல் திசை திருப்பவே முயலுவீர்கள் என்பது நான் உட்பட உங்கள் வாசகர்கள் அனைவருமே அறிவோம்.   ஆனாலும் அவர்களையும் மந்திரித்துவிட்ட ஆடுகளாகவே ஆக்கிய வித்தைகளை எப்படி கற்றுக்கொண்டீர்கள் என்று அறிய நான் விரும்புகிறேன்.

நான் உங்களை நோக்கி இந்த பதிவை எழுத காரணம் நித்யாவை பற்றிய உங்கள் பதிவு மட்டுமல்ல, நீங்கள் யாருக்கோ ஜால்ராவாக மாறி, அதன் பொருட்டு பல தரமான எழுத்தாளர்களை அவதூறு செய்கிறீர்கள்.  தயவு செய்து நிறுத்துங்கள், உங்களுடைய சிறந்த கட்டுரைகளான மைக்கேல் ஜாக்சன், ஏ ஆர் ரகுமான் போன்ற கட்டுரைகளை எழுதுங்கள்.  உங்களின் தீவிர வாசனாக நான் அதையே பெரிதும் உங்களிடமிருந்து உங்கள் அசரவைக்கும் மொழியில் எதிர்பார்க்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நித்யாவுக்காக உங்கள் வலைப்பக்கத்தில் விளம்பரம் செய்துவிட்டு, இன்று 2009-லேயே  அவரை விட்டு விலகிவிட்டேன் என்று கதை விடுகிறீர்கள்.  எங்கள் ஊரில் இதற்கு பெயர் களவாணித்தனம்.

உங்களுடைய களவாணித்தனம் அம்பலப்படுத்தப்படும் போதெல்லாம் நீங்கள் விடும் டைலாக் பிரசித்தி பெற்றது; "தன்னைப்பற்றிய புனைவாகவே அதை எழுதினேன்" என்பீர்கள்.  தயவு செய்து சாரு... இன்னும் தோடர்ந்து உங்கள் வாசகர்களை ஆட்டு மந்தைகளாக்குங்கள்.  ஆனால் பிற எழுத்தாளர்களை அவதூறு செய்யாதீர்கள்.....

2 comments:

  1. it is a clear explanation about charu

    ReplyDelete
  2. i always suspected him and felt that he is not honest but the cat is out of the bag and he has been exposed.i don't think that even his mutton headed fans!would take him seriously anymore.thanks to nithya and ranji and their spiritual? research.

    ReplyDelete