Thursday, March 18, 2010

ஞாநியின் பதில்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பாராட்டி ஞாநி குமுதத்தில் எழுதிய ஓ பக்கங்களை பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை "ஞாநிக்கு கடிதம்" என்ற பெயரில் பதிவிட்டிருந்தேன்.   மேலும் ஞாநிக்கு அதை மெயில் மூலம் தெரியப்படுத்தியிருந்தேன்.  அவர் இரு தினங்களில் எனக்கு பதில் அனுப்பினார்.  அப்பதிலை இங்கு பதிவிடுகிறேன்.

அன்புள்ள பிரபாகரன்

உங்கள் கருத்துகள் சுவாரஸ்யமாக இருந்தன. கோலம் அமைப்பின் நோக்கம், வேலை விண்னைத்தாண்டி வருவாயா போன்ற படங்களை எடுப்பது அல்ல என்பதில் உங்களைப் போலவே நானும் தெளிவாக இருக்கிறேன். கோலம் வணிக சினிமா சூழலுக்கு வெளியே இருக்கும் இயங்கும் திட்டம்.

தமிழ் வணிக சினிமாவின் சூழலில் , விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் அவற்றின் குறைகளை மீறி ஆதரிக்கப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. அ ப்போதுதான் முழுக்குப்பைகளாக தயாரித்து வெளியிடப்பட்டு வரும் பெரும்பான்மை படங்களிலிருந்து அடுத்த அடி நோக்கி நகர முடியும். ஓ பக்கங்களை வாசிக்கும் வெகுஜன ரசனை உள்ள வாசகர்/பார்வையாளர்களை இன்னொரு திசை நோக்கி அடி எடுத்து வைக்கச் செய்யும் முயற்சியே என் எழுத்துகள். நம் ரசனைகள் வேறுபடலாம். நோக்கங்களிலும் லட்சியங்களிலும் வேறுபாடு இல்லை.


அன்புடன்
 
ஞாநி

6 comments:

  1. hey athika prasanki thanama eni bahave pannathada,

    ReplyDelete
  2. நல்ல பதிவு.. ஞானி போலித்தனம் இல்லாத நல்ல மனிதர்... அவர் கருத்துகளுடன் நாம் மாறு படலாம்.. ஆனால், நம் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை குறைத்து மதிப்பிட முடியாது

    ReplyDelete
  3. Thanks for the comments Ramji and Paarvaiyaalan....

    ReplyDelete
  4. anna nee athiga unmai solvathaha ninaithu poium solra, gniyai sollum karuthu poli illathathu yenpathu yenaku thayrium ,but solra namum athupolla nataka pakkanum

    ReplyDelete
  5. nee athiha book padikira , unnathu yennagal niraivara valthukal

    ReplyDelete